vaarunggal! inayunggal! (: puvani'in seyaliyil oru thuli :)

வணக்கம், மாணவர்களே!

 

                                                                                                           

 

 

உங்கள் அனைவரையும் "புவனியின் செயலியில் சில துளிகளுக்கு" வரவழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் சிறப்புகள்  பாரெங்கும் பரவி நமக்கு நுகர்வதற்கினிய பல அரிய வாய்ப்புகளை அமைத்துத் தந்துள்ளது. அதனைப் போற்றி காக்கும் பணிகள் நம்முடையது. அவ்வகையில் கணினியுகம் உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த தருவாயில், நமது தித்திக்கும் தமிழ்மொழியும் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டுத் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறது போலும். ஆமாம்....திருவள்ளுவரின் ,

" எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 

                                                                                                                                     அவ்வ துறைவது  அறிவு"

425-ஆவது  திருக்குறள் வரிகள் இதனைத்தானே எடுத்துரைக்கின்றன. அவ்வாறு வலம் வருகையில் " தமிழ் இலக்கணத்தை ஒரு கை பார்த்துவிட" என எண்ணம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, இதோ வந்துவிட்டது "புவனியின் செயலியில் ஒரு துளி! "... மாணவர்களே இச்செயலியில் அமைந்து வரும் பக்கங்கள் ஒவ்வொன்றும் இலக்கணத் தகவல்கள் மிகுந்தவை! அதனைச் சுவைத்து மகிழ இத்தளம் உங்களுக்குத் துணைப்புரியும்!

 

தொடங்குங்கள் உங்கள் இலக்கணத் தாகத்திற்கான வேட்டையை!   yes