4.0 புணரியல்
-->>இரண்டு சொற்கள் ஒன்றுபடப் புணர்வது புணர்ச்சி.
-->>நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஒன்றுப்படப் புணர்வதே புணர்ச்சி.
-->>புணர்ச்சி இருவகைப்படும்.
1) இயல்பு புணர்ச்சி
-->> நிலைமொழியில் உள்ள இறுதி எழுத்தும் வருமொழியில் உள்ள முதல் எழுத்தும் மாற்றமின்றிப் புணர்வது இயல்பு புணர்ச்சி.
-->> எடுத்துக்காட்டு : மலர் +,வளையம் =மலர் வளையம்
-->> நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருமாயின் அம்மெய்யும் அவ்வுயிரும் இயல்பாகப் புணரும்.
-->>மெய் +உயிர் --> ஆண்+அழகன்= ஆணழகன்
2) விகாரப் புணர்ச்சி
-->>இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சியாகும்.
-->>மூன்று வகைப்படும் --->> தோன்றல்
--->> திரிதல்
--->> கெடுதல்
தோன்றல்
-->> நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்.
- உயிர் + உயிர்மெய் -->> அ + தலைவன் = அத்தலைவன்
- சுட்டு+ யகரம் -->> அ+ யானை = அவ்யானை
- எகர வினா + யகரம் -->> எ+யானை = எவ்யானை
- ஓரெழுத்து ஒருமொழி + வல்லெழுத்து -->> பூ+சோலை= பூஞ்சோலை
- தனிக்குறிலை அடுத்து மெய் வந்து , வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்.
-->> கண்+இமை = கண்ணிமை
- உடம்படுமெய்
-->> நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து வந்து வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிரெழுத்து இருந்தால் அவை இயல்பாக புணர இயலா. அவ்விரு
உயிர்களையும் உடன்படுத்துவதற்குத் தோன்றும் மெய்யெழுத்தே உடம்படுமெய்யாகும்.
-->> வகர உடம்படுமெய் (வ்)
நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ முதலிய உயிர் எழுத்துகளைத் தவிர்த்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் "வ" கரம் தோன்றும்.
-->> யகர உடம்படுமெய் ( ய்)
நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் "ய" கரம் தோன்றும் .
திரிதல்
-->>நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.
- ணகர, னகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல்
>> ண்--> ட் ஆகும் (க்,ச்,ப் மட்டும்)
>>ன் முன் த்--> ற் ஆக மாறும்
- மகர ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய வல்லினத்தோடு புணரும்போது இன மெல்லெழுத்தாகத் திரியும்.
- லகர,ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல்.
>> ள் --> ட் ஆக மாறும் (க், ச், ப் மட்டும்)
>>ல் --> ற் ஆக மாறும் (க், ச்,ப் மட்டும்)
>> ள் முன் த் --> ட் ஆக மாறும்
>> ல் முன் த் --> ற் ஆக மாறும் (க்.ச்.ப் மட்டும்) .
கெடுதல்
-->>நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது 1 / ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் கெடுவது கெடுதல் புணர்ச்சி.
- மகரம் + இடையினம்
---> நிலைமொழி ஈற்றில் மகர மெய் வரும்பொழுது வருமொழி இடையினமாக இருக்குமாயின் அவ்விடத்தில் மகரம் கெடும்.
---> எடுத்துக்காட்டு : அறம் +வினை = அறவினை
- "மை" ஈற்றுப�� பண்புப்பெயர் புணர்ச்சி
---> நிலைமொழியில் உள்ள "மை" ஈறு வருமொழியோடு புணரும்போது "மை" ஈறு கெட்டு இனவெழுத்துடன் மறைந்தும் திரிந்தும் தோன்றியும் வரும்.
---> எடுத்துக்காட்டு : செம்மை + கோல் = செங்கோல்
- எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி
>> 1 -10 வரையிலான நிலைமொழி எண்ணுப்பெயருடன் 10 என்னும் வருமொழி இணைந்து வரும்.
---> எடுத்துக்காட்டு : இரண்டு + பத்து = இருபது
>>10 என்னும் நிலைமொழியுடன் 1-10 வரையிலான வருமொழி எண்ணுப்பெயர் இணைதல்.
---> எடுத்துக்காட்டு : பத்து + இரண்டு = பன்னிரண்டு
>> 1 - 10 வரையிலான நிலைமொழியுடன் அதே வருமொழி எண்ணுப்பெயர் புணர்தல்
---> எடுத்துக்காட்டு : ஒன்று +ஒன்று = ஒவ்வொன்று
- திசைப்புணர்ச்சி
- ---> திசையைக் குறிக்கும் சொல்லைத் திசைப்பெயர் என்பர்.
- ---> திசைச்சொல்லோடு புணரும் போது பின்வருமாறு புணரும்.
வலிமிகும் இடங்கள்
- சொற்றொடர்களில் வருமொழி “க், ச், த், ப்” ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுது மிகும்.
- வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால் வல்லினம் மிகும்.
வலிமிகா இடங்கள்
- சொற்றொடர்களில் , வருமொழி “க்,ச்,த்,ப்” ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது.
பயிற்சி!
https://goo.gl/forms/v1sAS9sbgrBY6p3d2