3.0 வாக்கியம்
- முழுக்கருத்தைத் தெரிவிக்கும் ஒரு சொல் கூட்டம் / முழு சொற்றொடர்
- தமிழ் வாக்கியங்களில் 3 உறுப்புகள் உள்ளன.
- எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.
1. எழுவாய்
- ஒரு செயல் நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது எழுவாய்.
- பயனிலையில் நின்று யார், எது,எவை,யாவை முதலிய வினாக்கள் எழுப்பினால் கிடைக்கும் விடை "எழுவாய்"
2. பயனிலை
- எழுவாயின் செயலைக் காட்டும் சொல் பயனிலை.
3. செயப்படுபொருள்
- பயனிலையில் நின்று யாரை, எதை, எவற்றை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடை "செயப்படுபொருள்" எனப்படும்.
வாக்கிய வகைகள்
கருத்து, அமைப்பு எனும் அடிப்படையில் பிரிக்கலாம்.
கருத்து அடிப்படையில் வாக்கியங்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. செய்தி வாக்கியம் --> தகவலை வெளிப்படுத்துதல்
2. வினா வாக்கியம் --> தகவலைப் பெறுதல்
3. விழைவு வாக்கியம் --> வேண்டுக்கோள், கட்டளை, சபித்தல், வாழ்த்துதல் ஆகிய அடிப்படையில் அமையும்.
4. உணர்ச்சி வாக்கியம் --> உள்ளத்து உணர்ச்சியைக் காட்டுதல்!
அமைப்பு அடிப்படையில் வாக்கியங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
1. தனி வாக்கியம் --> 1 எழுவாய் / பல எழுவாய்கள் = 1 பயனிலையைப் பெற்று வருதல்.
2. தொடர் வாக்கியம் --> 1 எழுவாய்= பல பயனிலைகலைப் பெற்று வருதல்
3. கலவை வாக்கியம்
--> ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை/ செய்திகளை ஒரே வாக்கியத்தில் கொண்டு வருவது.
--> ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து 1 / ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இடம் பெறும்.
--> 'என்னும்', 'என்றும்', முதலிய சொற்களையும் கொண்டு வரும்.
நேர்க்கூற்று/ அயற்கூற்று
நேர்க்கூற்று
- ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே கூறுவது.
- நேர்க்கூற்றில் ஒருவர் கூறியவற்றை (" ..") இரட்டை மேற்கோள் குறியிட்டுக் காட்ட வேண்டும்.
அயற்கூற்று
- நேர்க்கூற்றிலுள்ள சொற்களை மட்டும் மாற்றிப் பொருள் மாறாதவாறு படர்க்கை இடத்திற்கு ஏற்ப கூறுவது.
- அயற்கூற்றில் இரட்டை மேற்கோள் குறி இடப்படுவதில்லை.
- நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றாக மாற்றும் போதும் அயற்கூற்றிலிருந்து நேர்கூற்றாக மாற்றும் போதும் ஏற்படும் மாற்றங்களை அட்டவனைக் காட்டுகின்றது.
சொற்றொடர் / தொடர்
- ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்தால் சொற்றொடர் எனப்படும்.
- சொற்றொடர் 2 வகைப்படும்
1. தொகை நிலைத் தொடர்
- ஒன்றுக்கு மேற்பட்டச் சொற்கள் ஒரு சொல் போல் இயங�கும் போது, இடையில் சொல்லோ உருபோ மறைந்து வருதல் தொகை எனப்படும்.
- எடுத்துக்காட்டு : கரும்பலகை --> கருமையான பலகை ( 'ஆன' என்ற பண்புருபு மறைந்து வருதல்.)
தொகைகளின் வகைகள்
>>வேற்றுமைத்தொகை
--> வேற்றுமை உருபு மறைந்து வரும் சொற்றொடர் வேற்றுமைத் தொகையாகும்.
>>வினைத்தொகை
--> முதற்சொல் வினையடியாகவும் தொடர்ந்து வரும் சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்
--> காலம் காட்டும் உருபுகள் மறைந்து வரும்
-->எடுத்துக்காட்டு : ஊறுகாய் --> ஊறிய காய் (இறந்த காலம்)
--> ஊறுகின்ற காய் ( நிகழ் காலம்)
--> ஊறும் காய் ( எதிர்காலம்)
>>பண்புத்தொகை
--> பண்பை விளக்கும் உருபுகளான " ஆகிய", ஆன" ஆகியவைச் சொற்றொடர்களில் மறைந்து வரும்.
-->எடுத்துக்காட்டு : வட்டக்கண் --> வட்டமான கண்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
-->சொற்றொடரில் நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயரும் இணைந்து பண்பைக் குறிக்கும் உருபுகள் மறைந்து வரும்.
>> உவமைத் தொகை
-- >சொற்றொடரில் "போல", "போன்ற", "அன்ன", நிகர", "ஒப்ப" முதலிய உவமை உருபுகள் மறைந்து வரும்.
>>உம்மைத்தொகை
--> சொற்றொடரில் "உம்" என்ற சொல் மறைந்து பொருள் தருமாயின் உம்மைத் தொகை எனப்படும்.
2. தொகா நிலைத் தொடர்.
-->சொற்றொடர்களில் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத் தொடர் எனப்படும்.
--> ஒன்பது வகைப்படும்.
பயிற்சி !
https://goo.gl/forms/9kRqHUshQyziN3p63